×

பவானி நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

பவானி,மே10: பவானி நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள், பயணிகள் தாகம் தீர்க்கும் வகையில் பவானி புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு, தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பயணிகள், பாதசாரிகள் தாகம் தீர்க்க அந்தியூர் மேட்டூர் பிரிவில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை, நகராட்சி ஆணையாளர் மோகன்குமார் திறந்து வைத்தார். நகராட்சி பொறியாளர் காளீஸ்வரி, மேலாளர் உதயகுமார், துப்புரவு ஆய்வாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், இப்பந்தலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் களைப்பைப் போக்கும் தாது உப்புக் கரைசல் வழங்கப்படுகிறது.

The post பவானி நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Bhawani Municipal Administration ,Bhawani New Bus Station ,Andiyur ,
× RELATED மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்கள் திறப்பு